Wednesday, May 27, 2009

Thursday, May 7, 2009

சூரிய வெப்பத்தாக்கத்திற்கு கடைப்பிடிக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள்


* 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் தவிர்த்தல்?!

* குடையை பயன்படுத்துதல். இதில் கூச்சம் வேண்டாம். கருப்பு வண்ணத்தை தவிர்த்து மென்மையான வண்ணத்தை பயன்படுத்தலாம்.

* ஸ்டெயிலை தவிர்த்து சூரிய ஒளியை தடுக்கும் வகையிலான குளிர்ச்சி தரும் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணிதல்.

* காட்டன் ஆடைகள் நல்ல கைக்கொடுகும். வியர்வையை உறிஞ்சும்.

* காலையில் குளிர்ந்த உணவை உண்ணலாம். பழைய சாதம், கூழ் போன்றவை நாம் மறந்து போன உணவு வகைகள். சாப்பிட்டு பழகிப்பாருங்கள்.

* வீட்டில் மோர் எப்போதும் இருக்கட்டும். லஸ்சியாக , உப்பிட்ட மோராக திரவ உணவை அவ்வப்போது அருந்தலாம்.
கார உணவு இக்கோடைக் காலத்தில் எரிச்சலைத் தரும்.

* கீரை ஜூஸ் (ஒன்றுமில்லை வேகவைத்து சிறிது உப்புச் சேர்த்து வடிகட்டி நீர்தான்) இதில் உப்புசத்து மற்றும் உயிர்ச்சத்துகள் அதிக அளவில் உங்களுக்கு கிடைக்கும்.

* இருசக்கர வாகனங்களை வெயிலின் தாகம் குறையும் வரையில் தவிர்த்தல் நலம்.

* பேருந்தில் சன்னல் ஓரம் உட்கார்ந்தால் நெருப்பாற்றில் நீந்துவது போல. சென்னைவாசிகளை இதை தவிர்கிறார்கள் அனுபவசாலிகள்.

* வீடுகளில் உங்கள் சன்னல் மற்றும் கதவுகளில் ஈரத்துணியை நனைத்து அதிகம் தண்ணீர் இல்லாமல் போர்த்திவிடுங்கள். வெப்பத்தை சற்றுத் தணிக்கும்.

* வேர்க்குரு வந்து விட்டவர்கள் சந்தனத்தை குழைத்து ஆன்மீகவாதிப் போல் பூசிக் கொள்ளுங்கள். சில நாட்களில் பலன் கிடைக்கும்.

* தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறை குளியல் போடுங்கள். சென்னையில் இருக்கிறீர்களா கவலை வேண்டாம், டவளை எடுத்து நனைத்து பிழிந்து உடம்பை துடைத்துக் கொள்ளுங்கள்.

* வெளியேச் செல்லும் போது குடிநீர் சிறிய பாட்டில்களிலாவது கொண்டு செல்லுங்கள். வறட்சியின் போது நாக்கை நனைத்துக் கொள்ளுங்கள்.

* கர்சீப்பை நனைத்து ஈரத்துடன் தலையில் போட்டு நடக்க ஆரம்பியுங்கள்.