Thursday, April 23, 2009

அது ஒரு நிலாக்காலம்.

நான் பள்ளியில் படித்த காலத்தை நினைத்தால் இப்போது இனிமையாக இருக்கிறது. அப்போது எங்கள் ஊருக்கு மின்சாரம் வராத நாட்கள். பகலில் மரத்தடியில் அமர்ந்து படிப்போம். இரவில் வீட்டில் திண்ணையில் அமர்ந்து மண்ணெண்ணெய் விளக்கில் படிப்போம்.

 எனவே இந்த மின்சார வெட்டு எங்களை ஒன்றும் செய்யவில்லை. விவசாய காலங்களில் வயலுக்கு சென்று வேலை செய்யவேண்டும் . பெரும்பாலும் காலையில் காப்பி கொண்டு சென்ற நினைவு இருக்கிறது. அதன் பின் அங்கு களத்தில் அல்லது வயல் வரப்பில் அமர்ந்து வேலை செய்பவர்களை கவனிப்பேன். 

கோடை காலங்களில் வயலில் மாடு கட்டி உழுவார்கள்.முன் காலங்களில் கிணறு ஊற் று தோண்டி ஏற்றம் போட்டு தண்ணீர் இரைப்போம். கிணற்றில் முங்கிலால ரவுண்டாக வலயம் போல் செய்து கிணற்றுக்குள் வைத்து சுற்றிலும் மண் மூடி இருக்கும் அது தான் ஊற் று எனப்படும். அதன் ஒரு புறத்தில் தென்னை மரத்தை நடுவில் தோண்டி எடுத்து வாய்க்கால் போல் செய்து அதில் தண்ணீர் இறைத்து வயலுக்கு பாச்சுவார்கள்.வயலில் மடை திறந்து அனைத்து பத்திகளுக்கும் தண்ணீர் விடுவது தான் எனது வேலை. 

பிற்காலத்தில் டீசல் எஞ்சின் அதன் பின் மோட்டார் பம்பு வந்தது. டீசல் எஞ்சின் ஓடும்போது கேட்கும் அதிக சப்தம் நன்கு ஞாபகம் உள்ளது. மணிகொரு முறை டீசல் போட வேண்டும் . மோட்டார் ஓடும் போது அந்த வேலை இல்லை. கரண்ட் நின்று வயலுக்கு போய் வரும் போது மோட்டார் ஸ்டார்ட் பண்ண வேண்டும்.

 நாற்று நாடும் போது , அறுவடை செய்யும் போது , போரடிக்கும் போது பள்ளிக்கு லீவு போட்டு விட்டு வயலுக்கு செல்லவேண்டும். வைக்கோல் வீணாக கூடாது என்பதற்க்காக கோடை காலங்களில் இரவில் போரடிப்பர்கள். வயலின் நடுவில் இருக்கும் களம் என்ற மேட்டு பகுதியில் நெல் அடிப்பதும் ( அறுவடை செய்த) , போர் அடிப்பதும் நடக்கும். ஒரு கயிற்று கட்டிளை போட்டு அதில் அமர்ந்து இருப்போம். நன்றாக காற்று அடிக்கும் . மிகவும் நன்றாக இருக்கும் . போரடிக்கும் போது மாடுகளை ஓட்டி செல்ல வேண்டும். மிகவும் இனிமையான காலங்கள் அவை

வானத்தில் மேகங்கள் கோலம் போட்டது போல் இருக்கும் . அவை வேகமாக நகருவதையும் , பறவைகள் கூட்டமாய் பறப்பதை பார்ப்பது கண் கொல்லா காட்சியாகும்.

 வயலில் இரண்டு போகம் நெல் சாகுபடி செய்வோம். முதலில் குறுவை அதன் பின்பு தாளடி. கோடையில் எள், உளுந்து , பயிறு பயிரிடுவோம். தாளடியில் எப்போதும் மழையில் கஷ்டபடுவோம். நெல்லை காய வைக்கவும் வைக்கோலை காய வைக்கவும் மிகவும் சிரமப்படுவோம்.

 சில வருடங்கள் கரும்பு போட்டிருந்தோம். அது ஒரு வருட பயிர். கோடையில் கரும்பு வெட்டி கரும்பு ஆலைக்கு அனுப்ப வேண்டும். லாரி வரும் வரை ரோட்டில் காவல் காக்க வேண்டும். அப்போது மாட்டு வண்டி தான் வெளியூர் போவதற்கு. அதை ஓட்ட வண்டிக்காரர் உண்டு. 3 km தூரத்தில் உள்ள டவுனுக்கு போய் மளிகை சாமான்கள் வாங்கி வருவோம். ஒரு கூடையில் வங்கி வருவோம். அதே போல் நல அரைக்க , நல்லெண்ணெய் , தேங்காயெண்ணெய் செக்கில் ஆட்டி வருவோம்

மாதா மாதம் தேங்காய் வெட்டி வருவதும் இனிமையான வேலை. ஒரு பத்து தென்னை தோப்புகளுக்கு போய் வெட்டி வருவோம். வெட்டிய தேங்காய மாட்டு வண்டியில் எடுத்து வருவோம். அப்போது இளநீர் வெட்டுவோம். சித்திரையில் பன நுங்கு நன்றாக இருக்கும் . எங்களுடைய பனை மரத்தில் பனங் குலை வெட்டி வந்து தேவைப்படும்போது வெட்டி சாப்பிடுவோம்.

 இரவில் நிலவை பார்த்து கதை சொல்லுவோம். சினிமா பேரை ஒவ்வொருத்தராய் ஒவ்வொரு எழுத்தை சொல்லி தொடரவேண்டும். அப்போது படங்களின் எண்ணிக்கை குறைவு. எல்லா படங்களின் பெயரும் தெரியும். அருகில் உள்ள பட்டணத்தில் சினிமா பார்ப்போம். இப்போதும்  அந்த தியேட்டர் இருக்கிறது. 

காலையில் பேப்பர் , தபால் வராது மதியம் ஒரு மணிக்கு மேல்தான் வரும். எனவே காலையில் பட்டணம் போய் வங்கி வருவோம். பேப்பர்காரரும் எங்கள் தெருவில் வாங்கும் அத்தனை பேப்பரும் எங்களிடம் தந்து விடுவார். எனவே தின தந்தியுடன், தினமணி யும் படிப்போம்.

 குமுதம் எங்கள் வீட்டில் வாங்குவோம். பக்கத்து வீட்டில் ராணியும் , முதல் வீட்டில் ஆனந்த விகடனும் வாங்குவார்கள். ஏதேனும் சிறப்பு மலர் என்றால் நாங்களும் விகடன் வாங்குவோம்,அப்படி ஆனந்த விகடனின் மாவட்ட மலர் அனைத்தும் வாங்கி உள்ளோம். குமுதத்தில் வைர மோதிரக்கதை அப்போது பிரபலம்.

Friday, April 10, 2009

அந்த நாட்கள் மிக ரம்மியமான நாட்கள

 
எனது விடுமுறை நாட்களில் எனக்கு பிடித்தமான செயல, எனது சிறு வயது நாட்களை நினைத்து பார்த்தல் ஆகும். ஒரு சிறிய கிராமத்தில் பணவசதி , மின் வசதி , பேருந்து வசதி இல்லாத நிலையில் , வங்கியில் படிப்புக்கு கடன் வாங்கி என்னை இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்க வைத்து தமிழ் நாட்டிலேயே வேலை பார்க்க வைத்து என்னை இந்த நிலைக்கு (முதன்மை அதிகாரி) கொண்டு வந்த என் அப்பாவின் நினைவுதான் அதில் முதலில் வருவது . 

எங்கள் கிராமம் ஒரு ஆற்று பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.ஆற்றில் தண்ணீர் வரும் பொது ஆற்றின் குறுக்கே உள்ள குறுகிய மூங்கில் பாலத்தில் நடந்து வர தைரியம் வேண்டும்.பாலத்தில் உள்ள பலகைகள் ஆணி இல்லாமல் ஆடிக்கொண்டு பயத்தை உண்டுபண்ணும்.இரவு நேரத்தில் கேட்க வேண்டாம்.ஆற்றில் தண்ணீர் வரும்போது மாட்டு வண்டியில் ஆற்றை கடந்து வர மிகவும் பயமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நான் கல்லூரியிலுருந்து வரும்போது ஆற்றங்கரையில் பஸ் வரும்வரை காத்திருந்து என்னை வீட்டுக்கு அழைத்து செல்வார்கள். அவர்கள் இப்போது இல்லை.அவர்கள் மறைந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன.

எனது அம்மா இப்போது எனது தம்பியுடன் அதே கிராமத்தில் இருக்கிறார்கள். கிராமம் இப்போது மிகவும் முன்னேறிவிட்டது. ஆற்றுக்கு பாலம் கட்டிவிட்டார்கள். மின்சாரம்,கேபிள் டிவி , பஸ் வீட்டுக்குவீடு பைக் ஸ்கூட்டர் வந்துவிட்டது. முன்பு போல் யாரும் மாட்டுவண்டி எங்கும் உபயோகிப்பது இல்லை.குடவாசலிலுருந்து வரவேண்டுமென்றால் ஆட்டோ பிடித்து வரலாம்.

எட்டாவதுவரை உள்ள எங்கள் ஊர் பள்ளிகூடத்தில படித்துவிட்டு பின்னர் SSLC வரை குடவாசல் பள்ளியில் படித்த நினைவுகள் என்றும் பசுமையாக நினைவில் உள்ளது.ஆரம்பத்தில் தினமும் 2 மைல் நடந்து பள்ளிக்கூடம் சென்றுவந்தேன் பின்னர் சைக்கிளில் சென்றுவந்தேன் .நடந்து போகும்போது ஏற்பட்ட சந்தோசம் சைக்கிளில் போகும்போது ஏற்படவில்லை. தினமும் திரும்பிவரும்போது மளிகை சாமான்கள் வாங்கிவருவேன். வரும்போது ஆற்றில் இறங்கி சைக்கிள் மணலில் தள்ளிக்கொண்டு வருவேன். கோடை காலங்களில் காய்ந்த வயல்களில் இறங்கி நடந்து செல்வேன்.

வாரவாரம் ஞாயிறு அன்று ஆற்றங்கரைக்கு சென்று அந்த பாதையில் போகும் பேப்பர்காரரிடம் குமுதம் புத்தகம் வாங்கிவருவேன். அப்போது முதல் படிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. குமுதத்தில் வரும் தொடர்கதைகளை பயிண்டு செய்து வைப்போம்.

எங்கள் தெரு முதல் வீட்டில் ஆனந்த விகடன் வாங்குவார்கள். எனவே அவர்கள் வீட்டில் விகடன் படித்த நினைவு இருக்கிறது.அதில் அட்டை படம் ஜோக் இருக்கும்.பக்கத்துக்கு வீட்டில் ராணி புத்தகம் வாங்குவார்கள்.அதையும் அங்கு சென்று படிப்பேன்.தினமும் வயலுக்கு சென்று வயல் வேலை செய்வதை பார்ப்பதும் , மாதாமாதம் தேங்காய் வெட்டுவதும் , மனதில் மறக்காத நினைவாக இன்னமும் இருக்கிறது.

பண்டிகைகள் மிக நன்றாக கொண்டாடுவோம். தீபாவளிக்கு பல நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் செய்ய மாவு அறைத்து வருவோம். சாதா முறுக்கு, முள்ளு முறுக்கு, ரவா உருண்டை ,மைசூர் பாக்கு, தேங்காய் பாறை முதலிய பலகாரங்கள் வீட்டில் செய்வார்கள்.

பொங்கலுக்கு கரும்பு ,வாழைபழம் , மஞ்சள், இஞ்சி , பாட்டாசு முதலியவை குடவாசல் மாட்டுவண்டியில் சென்று வாங்கிவருவதும் நினைவு உள்ளது. பொங்கல் மற்றும் தீபாவளிக்கு வரிசை பொருட்கள் என்கண் மற்றும் ஆரியச்சேரி சென்று அக்காக்களுக்கு கொடுத்து வருவோம். தீபாவளிக்கு புது டிரஸ் வாங்குவது சந்தோஷமாக இருக்கும் . கும்பகோணம் சென்று டிரஸ் வாங்கிவருவோம். அக்கா யாராவது அங்கு கடைக்கு நீராக வருவார்கள் அவர்கள் வரிசை புடவை தேர்ந்தெடுப்பார்கள்.
பிள்ளையார் சதுர்த்திக்கும் மாட்டு பொங்கலுக்கும் பிள்ளையார் கோவிலுக்கு செல்வோம்.மாடுகளுக்கு மாலை போடுவோம்.

PUC படிக்க பூண்டி கல்லூரியில் சேர்த்தேன் .முதல் முதலாத வீட்டைவிட்டு வெளியே விடுதியில் தங்கி படித்தேன். என் வாழ்வில் மிகவும் சந்தோஷமான நாட்களில் அந்த நாட்களும் ஒன்று.
நன்கு படித்து நல்ல மார்க் வாங்கி இன்ஜினியரிங் காலேஜில் சேரவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருந்தகாலம் அது.
சேர்த்த முதல் நாள் அங்கு வந்த மாணவர்களின் அப்பாக்கள் ஒன்று சேர்ந்து விடுதி அறை நண்பர்களை சேர்த்துவிட்டார்கள்.
செழும்பரிதி,சுந்தர் , குமரகுருபரன் ,முருகானந்தம் ஆகியோர் பெயர் நினைவுக்கு வருகிறது.அவர்கள் திருத்துறைபூண்டி,மன்னார்குடி மாணவர்கள். வாரவாரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். அழுக்கு துணிகளை துவைத்து எடுத்து செல்வேன்.

இன்ஜினியரிங் படிப்பு காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் படித்தேன்.மிகவும் இனிமையான நாட்கள் அவை .தினமும் மாலையில் கல்லூரிக்கு சென்று போட்டி போட்டுகொண்டு படிப்போம்.

கணக்கில் எல்லா செமஸ்டர்களிலும் 100 % மார்க் வாங்கினேன். மூன்றாம் வருடத்தில் ECE பிரான்ச் செலக்ட் செய்தேன்.அந்த பிரிவில் நன்றாக படித்து எல்லா வருடங்களிலும் முதல் ரேங்க் வாங்கினேன்.

காலேஜ் டூர் மூன்று முறை சென்று வந்தோம். மூன்றாம் வருடத்தில் திருச்சி,ஊட்டி, மெட்ராஸ் சென்றுவந்தோம். நான்காம் வருடத்தில் திருவனத்தபுரம்,பெங்களூர்,மைசூர், ஹைதராபாத் சென்றுவந்தோம். கடைசி வருடத்தில் கோவா , பாம்பே , டெல்லி , ஆக்ரா , ஸ்ரீநகர் சென்று வந்தோம்.
ஸ்ரீநகர் முதல் ஜம்முதாவி வரை விமானத்தில் வந்தோம்.
முதல் விமானப்பயணம் நன்றாக இருந்தது.

காரைக்குடி காலேஜ் டவுனிலிருந்து தனியாக உள்ளது.எனவே தினமும் எப்போதும் படிப்பதுதான் வேலை. வாரம் ஒருமுறை டவுன் போய்வருவோம்.டவுன் பஸ் அல்லது வாடகை சைக்கிள் எடுத்து போய்வருவோம். மாதமொருமுறை நானும் நாலைந்து நண்பர்களும் குன்றக்குடி கோயில் போய்வருவோம்.
ஆண்டு விடுமுறையில ஊருக்கு வருவோம்.ஆனால் study லீவ் நாட்களில் அங்கேயே தங்கி படிப்போம்.

காலேஜ் நாட்கள்

அழகப்பா இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்த முதல் நாள் இன்னமும் நினைவில் உள்ளது.

மிகுந்த மகிழ்ச்சியோடு புது நண்பர்களோடு காலேஜ் மற்றும் விடுதி வாழ்கையை தொடங்கினோம்.காரைக்குடி டவுனுக்கு சென்று புது டிரஸ் , புது ஷூ வாங்கிவந்தோம்.காலேஜ் கடையில் புத்தகம்,நோட் புத்தகம் வாங்கி படிக்க தொடங்கினோம் .முதல் வருடம் SCH என்னும் ஹாஸ்டலில் ரூம் எண் 39 என்னுடைய ரூம்.இது முதல் மாடியில் இரண்டாவது ரூம் ஆகும்.

விஜிடரியன் உணவு விடுதி சாப்பாடு நன்றாக இருக்கும்.என்னுடன் நாலைந்து நண்பர்கள் எப்போதும் படிக்க செல்லும்போதும், சாப்பிட போகும்போதும் உடன் வருவார்கள். அவர்களில் சிவநேசன் , சிவசுப்ரமணியம், அசோகன் பெயர் நினைவுக்கு வருகிறது. தினமும் மாலை , மற்றும் இரவு சாப்பிட்ட பின்னரும் படிக்க முருகப்பா ஹால் அல்லது மெயின் பில்டிங் ஹால் செல்லுவோம் . தினமும் இரவு 9 மணிவரை படித்துவிட்டு வருவோம். விடுமுறை நாட்களில் ஆலமரம் செல்லுவோம். என்னுடைய எல்லா நண்பர்களும் எல்லா பரீட்சைகளிலும் நல்ல மார்க் வாங்குவோம். 

மெஸ்ஸில் சாப்பாடு தயாராகும் வரை , மாடியில் புத்தகம் மற்றும் பேப்பர் இருக்கும் .டேப் ரிகார்டரில் பாட்டு கேட்டுகொண்டே படித்துவிட்டு பொழுது போக்குவோம். மெஸ்ஸில் ஞாயிறு காலை மசால் தோசை நன்றாக இருக்கும் .தினமும் மாலையில் காப்பி,டீ மற்றும் பப்ஸ், கேக்,ஸ்வீட் காரம் ஏதேனும் ஒன்று இருக்கும்.

இரண்டாவது வருடம் ENH என்னும் விடுதியிலும் மூன்றாம் வருடம் ETH என்னும் விடுதியிலும் நான்காவது வருடம் TNH என்னும் விடுதியிலும் கடைசி வருடம் KNH என்னும் விடுதியிலும் தங்கினோம். இரண்டாவது வருடம் ENH என்னும் விடுதியிலும் மூன்றாம் வருடம் ETH என்னும் விடுதியிலும் நான்காவது வருடம் TNH என்னும் விடுதியிலும் கடைசி வருடம் KNH என்னும் விடுதியிலும் தங்கினோம்.

எல்லா விடுதியிலும் முன்புறம் விளையாடும் இடம் இருக்கும்.மாலை நேரங்களில் யாராவது விளையாடிகொண்டே இருப்பார்கள். ஹாஸ்டல் அருகில் டீ கடையும் சைக்கிள் வாடகை கடையும் இருக்கும். காரைக்குடி டவுனுக்கு போகவேண்டுமானால் சைக்கிள் எடுத்துக்கொண்டு போவோம். கேரியர் இருக்காது.இரவு செகண்ட் ஷோ சினிமா போவோம்.காரைக்குடி டவுன் அல்லது கோட்டையூர் போவோம்.

நெய்வேலி அன்றும் இன்றும ( Neyveli Township )

நெய்வேலி முன்பு ஒரு அமைதியாக இருந்தது.ஒரேயொரு அமராவதி சினிமா கொட்டகை மட்டும் இருந்தது. சொரத்தூர் மற்றும் செடுத்தான் குப்பம் ஆகிய இடங்களில் டென்ட் சினிமா கொட்டகைகள் இருந்தன .புது படங்கள் அமராவதியிலும் பழைய படங்கள் அங்கும் பார்போம். அமராவதி சினிமா கொட்டகை NLC க்கு சொந்தமானது. முன்பதிவு எல்லாம் உண்டு.

முன்பு பிலிம் ரூல் வந்தால்தான் படம். இப்போது டிஷ் அன்டன்னா மூலம் டிஜிட்டல் படம் எல்லா சினிமா கொட்டகைக்கும் வந்து விட்டது.

இப்போது டெய்லி மார்கட் இருக்கும் இடத்தில் காய்கறி மார்க்கெட் இருந்தது.ARC மட்டும் தான் நகைகடை .ICH மட்டும் அப்படியே உள்ளது.புளு டையமண்டு ஹோட்டல் புதிதாக வந்தது. 27 ஆம் பிளாக் உடுப்பி , 10 ஆம் ராம் பவன் , 26 ஆம் பிளாக் சொர்ணபவன் ஆகிய ஹோட்டல் களும் புதுக்குப்பம் ஹோட்டல் அப்போது இருந்தன. நெய்வேலியிலிருந்து சிதம்பரம் , கடலூர் , பண்ருட்டி , விருத்தாசலம் தவிர மற்ற ஊர்களுக்கு அதிகம் பஸ் கிடையாது.

நெய்வேலியிலிருந்து சிதம்பரம் , கடலூர் , பண்ருட்டி , விருத்தாசலம் தவிர மற்ற ஊர்களுக்கு அதிகம் பஸ் கிடையாது. அப்போது தான் பண்ருட்டி நெய்வேலி தெர்மல் டவுன் பஸ்சும் நெய்வேலி டவுன்ஷிப் விருத்தாசலம் டவுன் பஸ்சும் விட்டார்களா. எராளமான NLC பஸ் அப்போதே உண்டு.

அப்போது போன் வசதி யாரிடமும் கிடையாது . போஸ்ட் ஆபிசில் கால் புக் செய்து கால் கிடைக்கும் வரை வெயிட் பன்ன வேண்டும்.STD பேச 16 ஆம் போன் ஆபிசிலிருந்து பேச வேண்டும்.வெலியுரிலிருந்து பேச வேண்டுமானால் போஸ்ட் ஆபிசுக்கு பண்ணினால் கூப்பிட்டு வருவார்கள் . எப்போதோ வீட்டுக்கு வீடு போன் ஆளுக்கு ஆள் செல் போன் .

முன்பு படம் எடுக்க கெம்பு ஸ்டுடியோ போக வேண்டும். கேமரா , பிலிம் ரோல் எடுத்துக்கொண்டு டூர் போகவேண்டும் . பிலிம் ரோல் கழுகுவதும் பிரிண்ட் போடுவதும் பெரிய வேலை. இப்போது டிஜிட்டல் கேமரா எல்லோரிடமும் வந்துவிட்டது.

அப்போது டிவி யே கிடையாது. பின்னர் மெட்ராஸ் , சிலோன் டிவி , ஆண்டனா போட்டால் தெரியும். சிலர் வீட்டில் மட்டும் டிவி இருக்கும். ஞாயிறு படம் அற்றும் வெள்ளி ஒலியும் ஒளியும் பார்க்க அவர்கள் வீட்டிற்கு அவர்கள் நண்பர்கள் குடும்பத்துடன் வருவார்கள் .அப்போது உலக கிரிகட் மேட்ச் ரொம்ப பாப்புலர்.கபில்தேவ் அதிரடியாக் விளையாடி கப் வாங்கினோம்.

சமீபத்தில் தான் கேபிள் டிவி வந்தது. சன் டிவி யும் பிபிஸி, ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்னும் நான்கு சேனல்கள் தெரிந்தன.
அதற்கு டிஷ் ஆண்டெனா போடவேண்டும். ஹோடேல்களிலும் பணக்கார வீடுகளிலும் அவை இருந்தன. அதற்கு டிஷ் ஆண்டெனா போடவேண்டும். ஹோடேல்களிலும் பணக்கார வீடுகளிலும் அவை இருந்தன.

நானும் எனது நண்பர் உலகப்பனும் ஆரம்பத்திலேயே டிவி வாங்கிவிட்டோம் .மெட்ராஸ் பார்க்க நாங்களே ஒரு அன்ட்டேன்னா தயார் செய்தோம் .ஒரு பூஸ்ட்ர் மட்டும் மெட்ராஸ் ரிட்சி தெருவில் வங்கி வீட்டின் மேல் ஒரு மூங்கில் மரத்தில் கட்டினோம். மெட்ராஸ் 1 & 2 மற்றும் இலங்கை தெரிந்தது. உடனே மற்றும் இரண்டு பூஸ்ட்ர் வாங்கி எங்கள் சொந்த ஊரிலும் டிவி பார்கவைத்தோம்.

பின்னர் NLC இல் கேபிள் அமைக்கப்பட்டது. இப்போது சுமார் 75 சேனல்கள் வருகின்றன.அப்போது வந்த பிபிஸி இப்போது வரவில்லை . சன் தொடர்ந்து வருகிறது. கோல்டன் ஈகிள் ஸ்டார் விஜய் ஆனது.

நடுவில் PC எல்லா வீட்டுக்கும் வந்து விட்டது. அனைத்து பசங்களும் வீடியோ கேம்ஸ் விளையாட கற்றுகொண்டர்கள். இப்போது இன்டர்நெட் வந்துவிட்டது. எல்லோரும் இப்போதும் ஈ மெயில் பார்க்க , படம் டவுன் லோட் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். பல வருடங்கள் PC வைத்துள்ள எனது நண்பர் பலருக்கு ஈ மெயில் அனுப்ப நான் தான் உதவி செய்ய வேண்டும். ஆனம் வாய்ஸ் சாட்டிங் மற்றும் வீடியோ சாட்டிங் பண்ணும் நண்பர்களும் இருக்கிறார்கள்.

நெய்வேலி வந்த உடன் எங்களுக்கு 27 ஆம் வட்டத்தில் மூன்று பேருக்கு ஒரு வீடு வீதம் வீடு கொடுத்தார்கள் . நாங்கள் ஒரு வீட்டில் தங்காமல் அதை மெஸ் ஆக அமைத்தோம். ஊரிலுருந்து சமையலுக்கு ஆள் வைத்தோம். நல்ல சாப்பாடு கிடைத்தது. நாங்கள் 15 பேர் சேர்த்து மெஸ் நடத்தினோம். யாரவது ப்ரீ ஆக இருப்பவர் மளிகை சாமானும் கறிகாய்களும் வாங்கி தர வேண்டும் என்று ஏற்பாடு.

எனது நண்பர் அனைவரும் சிதம்பரத்தில் பார்ட் டைம் ME வகுப்பு சேர்ந்து படித்தார்கள். எனவே நான் தான் அனைத்து பொருட்களையும் வாங்கிதர நேரிட்டது. வாரா வாரம் ஞாயிறு இரவு மெஸ் விடுமுறை .

அப்போது மெயின் பஜாரில் நேரு மளிகையும் நெய்வேலி மளிகையும் தான் கடைகள். அப்போது புதிதாக சேர்ந்தவர்களுக்கு 27 பிளாக் அல்லது 10 ஆம் பிளாக்கில் வீடு கொடுத்தார்கள்.பின்னர் 5 ஆம் ப்ளாக் 6 ஆம் ப்ளாக் காட்ட ஆரம்பித்தார்கள்.

எனக்கு திருமணம் 1983 இல் திருமணம் விருதாச்சலத்தில் நடந்தது. எங்கள் பாட்ச்சில் முதல் திருமணம். எனது நண்பர்கள் அனைவரும் வந்தார்கள். தனி வீடு 6 மாதம் கழித்து தான் கொடுத்தார்கள்.அதுவரை தினமும் விருதாச்சலத்தலிருந்து வேலைக்கு வந்தேன்.

பின்னர் 5 ஆம் பிளாக்கில் டைப்-1 வீடு கிடைத்தவுடன் அங்கு சென்றேன். அப்போது தான் கட்டிய புதிய வீட்டிற்கு நாங்கள் சென்றோம். பின்பு பல வீடுகள் மாறி எப்போது உள்ள 12 ஆம் பிளாக் வந்தோம். மிகவும் வசதியாய் மெயின் பஜார் அருகில் உள்ளது .இங்கு வந்து சுமார் 8 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது கார் வங்கி அதற்கு கொட்டகை கட்டி உள்ளோம்.

அப்போது ஜவஹர் பள்ளிகூடத்தில் சீட் வாங்குவதற்கு இடம் பிடிக்க முதல் நாளே இரவு செல்ல வேண்டும். மாதா மாதம் பணம் கட்டவும் மிகவும் சிரமப்படவேண்டும். குழைந்தைகள் டாக்டர் முருகன் ரொம்ப நல்லவர். எப்போதும் ஆஸ்பத்திரியில் கூட்டமாக இருக்கும். ஆனாலும் நன்கு பார்ப்பார்.

அப்போது பெங்களூர் போக மாலையில் ஒரு ரயில் உண்டு அதில் நான் பெங்களூர் போயிருக்கிறேன் .மெட்ராஸ் போக விமானம் உண்டு. அதிலும் நான் போயிருக்கிறேன் . போஸ்ட் ஆபிஸ் NSC மிகவும் பாப்புலர் ஆன இன்கம் டாக்ஸ் சேவிங் ஸ்கீம் .எல்லோரும் வாங்குவார்கள். அதற்கு குலுக்கலில் பரிசும் உண்டு. எனக்கு பரிசு கிடைத்ததில்லை. போடும்போது ஒரு பர்சன்ட் இன்சென்டிவ் கொடுப்பார்கள்.

அப்போது பஸ் ஸ்டாண்டில் ரிக்க்ஷா பிடித்து வீட்டுக்கு வர வேண்டும். ஆட்டோ அதிகம் இருக்காது. விருத்தாசலத்தில் அப்போது குதிரை வண்டிதான்.

எனக்கு மேல் அதிகாரி சுதர்சன பிள்ளை என்பவர். மிகவும் நேர்மையான் நல்ல அதிகாரி. நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்தது முதல் அவர் ஒய்வு பெரும் வரை அவரிடம் சுமார் 17 வருடங்கள் வேலை பாத்தேன். இப்போது அவர் சித்தூரில் இருக்கிறார்.

அப்போது மெயின் பஜார் பார்க் உடறபயிற்சி செய்யும் இடமாக இருந்தது. நாங்கள் தினமும் 27 ஆம் வட்டத்திலிருந்து நடந்து வந்து உடற் பயிற்சி செய்துவிட்டு செல்வோம் .பார்க்கில் நடுவில் ஒரு ஆவின் பால் கடை இருந்தந்து. அது இடம் மாறி எப்போதும் இருக்கிறது.

எட்டு ரோட்டில் அப்சரா என்னும் அசைவ ஹோட்டலும் 26 ஆம் ப்ளாக் லில்லி சலூனும் அப்போது பிரபலம். அப்போது டேப் ரிக்கார்டர், பின்னர் வீடியோ , இப்போது CD மற்றும் DVD இல்லாத வீடு இல்லை .

நான் சந்தித்த சில நட்சந்திரங்கள்.


எனக்கு ஊர் சுற்றுவது மிகவும் பிடிக்கும். அப்படி செல்லும் பொது சில திரை நட்சத்திரங்களை சந்தித்து இருக்கிறேன். அப்படி சந்தித்தவர்களில் நன்கு நினைவு வருவது விஜயகாந்தும் ஒருவர். 1989 இல் என்று நினைக்கிறன் . சென்னையிலிருந்து டெல்லி விமானத்தில் போகும்போது எனக்கு பக்கத்துக்கு சீட்டில் பார்த்தால் விஜயகாந்த். ஒரே அதிர்ச்சி பேசலாமா என்று ஆர்வம். யாரும் அவரை கவனித்ததாக தெரியவில்லை. எனது நண்பர் என்னை அவரிடம் பேச தூண்டினர்.

ரொம்ப நேரம் பேசிக்கொண்டே சென்றோம். அப்போது அவர் அவ்வளவு பிரபலம் ஆகாத நேரம்.காஷ்மீரில் ஒரு படத்திற்காக செல்லுவதாக சொன்னார். நெய்வேலியை பற்றியும் எங்கு வரும்போது சுற்றிபார்க்க அவரை அழைத்த நினவு வருகிறது.நான் எதோ பொய் சொல்லுகிறேன் என என்ன வேண்டாம். என்னுடம் பயணம் செய்த என்னுடைய நண்பர் நெய்வேலியில் தான் இருக்கிறார்.அப்போது நான் நாங்கள் அனைவரும் அவரது விசிறிகள்தான் என்று சொன்னதால் தான் பின்னர் தேர்தலில் விருதாச்சலத்தில் நிற்கபோகிறேன் என்று தேர்தலின் போது என்னிடம் சொன்னார். ( இது மட்டும் ஒரு சின்ன பொய் ). 

ஒருமுறை ஊட்டி ரோஸ் தோட்டத்தில் விவேக்கை பார்த்தோம் பேசினோம்.அவர் மனைவியுடன் வந்திருந்தார். அவருக்காக வாட்டர் பால்ல்ஸ் ஆன் செய்தார்கள். நன்றாக இருந்தது. காமெராவை மறந்து லொட்ஜ் ரூமிலேயே விட்டுவிட்டு வந்ததை நினைத்து பல நாட்கள் வருந்தினேன்.

காலேஜில் படித்தபோது வருடாவருடம் ஏதாவது விழாவிற்கு நட்சந்திரங்கள். யாரையாவது கூப்பிடுவார்கள். அப்படி பாரதிராஜா, பாக்யராஜ், மனோரமா வந்திருக்கிறார்கள்

நான் வீடு மாற்றிய கதை

நான் இங்கு வந்து 28 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

இப்போதுதான் வந்ததுபோல் நான் இங்கு வந்தது நன்கு நினைவு உள்ளது. நான் இதுவரை அனேகமாக புதிதாக கட்டிய வீட்டில் தங்கியுள்ளேன்.இப்போது கடந்த எட்டு வருடமாக பழைய வீட்டில் உள்ளேன். இது எனது ஆறாவது வீடு. இனி வீடு மாறவேண்டியிருக்காது. 

நான் 27 ஆம் வட்டம் டில்லி ரோட்டில் உள்ள டைப் - 1 வீட்டுக்கு முதலில் வந்தேன். எனது காலேஜ் நண்பர்களே என்னுடன் தங்கினர்.ஒரு வீட்டை மெஸ் ஏற்பாடு செய்து அங்கு சாப்பிட்டு வந்தோம். 

திருமணத்திற்கு பின்னர் 5 ஆம் வட்டம் டைப் - 1 வீட்டுக்கு வந்தேன். அதன் பின்னர் 3 வருடம் கழித்து டைப் - 2 வீடு 6 ஆம் வட்டம் கிடைத்து வந்தோம். அங்கு 5 வருடங்கள் வசித்துவிட்டு 21 ஆம் வட்டத்தில் டைப் - 3 வீடு கிடைத்து வந்தோம் .

அங்குதான் பிரச்சனை ஆரம்பமானது. அந்த இடம் கடைதெரு, பஸ் ஸ்டாண்ட்,பள்ளிக்கூடம் ஆகியவற்றிற்கு ரொம்ப தள்ளி இருக்கும் இடமாக இருந்ததால் மிகவும் சிரமபடோம். அப்போது அங்கு இருந்த எனது நண்பர்கள் என்னை வரலாம் என்று சொல்லியதால் அங்கு சென்றோம். ஆனால் அங்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. திடீரென்று பார்த்தால் ஒரு நாள் எனது நண்பர்கள் வீடு மாற்றிக்கொண்டு சென்று விட்டார்களா. 

நானும் உடனே வேறு வீடு வசதியான இடமாக பார்த்து மாற்றி வட்டம் 6 இல் டைப் -3 வீட்டுக்கு வந்தேன். மிகவும் வசதியுடன் மாடியில் சைடு பால்கனி உள்ள வீடு. கடைதெரு, பஸ் ஸ்டாண்ட்,பள்ளிக்கூடம் ஆகியவற்றிற்கு அருகில் இருந்தது.
திடீரென்று பார்த்தால் ஒரு நாள் எனது பக்கத்துக்கு வீட்டுக்காரர் வீடு மாற்றிக்கொண்டு சென்று விட்டார்.

அங்குதான் பிரச்சனை ஆரம்பமானது. புதிதாக வந்தவர் அட்டகாசம் தங்க முடியவில்லை. இசைக்குழு, சாலையோர பரோட்டா கடை நடத்திவந்தவர் அவர்.ஏற்கெனவே இருந்த வீட்டில் லொள்ளு தங்க முடியாமல் துரத்திவிடப்பட்டு இங்கு வந்தவர். இங்கும் வந்து அதை தொடந்தார்.

எங்களுக்கு அவர் வந்த உடனே தொல்லை ஆரம்பமாகி விட்டது. ஒரு வாரமாக தினசரி பேப்பர் ஹிந்து வரவில்லை.ஒரு வாரம் கழித்து பேப்பர் பையன் ஒருவழியாக பக்கத்துக்கு வீட்டுக்காரர் இரண்டு ஹிந்து பேப்பரையும் எடுத்து வைத்திருந்தது தெரிந்தது. அதே போல் பால் பாக்கெட்டுகளையும் , தபால்களையும் எடுத்து வைத்திருந்தார்கள். அடிக்கடி அதே போல் செய்வார்கள்.ஒரே பேஜார்தான். 

தபால் காரரும் பேப்பர் பையனும் இந்த வீடு உங்களுக்கு சரிப்பட்டு வராது வேறு வீடு பாருங்கள் என்று சொல்லி விட்டார்களா. 

தினம் காலையில் பேப்பர் காரரையும் பால்காரரையும் தபால்காரரையும் வரும் வரை ஜன்னல் வழியாக பார்ப்பதே எனது வேலையாகி விட்டது. அத்தோடு முடிந்ததா என்று பார்த்தல் பிரச்சனை வேறு வடிவத்திலும் வந்தது. அவர்கள் வீடு எப்போதும் பூட்டியிருக்கும். யாரேனும் பூட்டை கவனிக்காமல் காலிங் பெல்லை அழுத்திவிட்டால் போதும் பெல் சப்தம் நாலு வீட்டுக்கு கேட்பதுபோல் அடிக்கும். அதை நிறுத்த முடியாது. வீட்டை திறந்து அதற்கான சுவிட்சை நிறுத்தவேண்டும். எனவே அந்த பெல் எப்போதும் அடித்துகொண்டே இருக்கும்.

அதே போல் துணி அயர்ன் பண்ணுபவன், வேலைக்காரி தொல்லையும் தாங்க முடியாது. வேலைக்காரி போன் செய்து வர லேட்டாகும் அல்லது வரவில்லை என்று அவர்களிடம் சொல்ல சொல்வாள். நீயே போனில் சொல்ல வேண்டியதுதானே என்றபோது அவள் சொல்லிய பதில் அப்படியே எங்களை தூக்கிவாரி போட்டது .அவளுடைய எஜமான் தூங்கி கொண்டிருப்பார்களாம்.எனவே அவர்களை தொந்தரவு செய்யாமல் எங்களிடம் சொல்லி அவர்கள் விழிக்கும் பொது சொல்லவேண்டுமாம். 

உடனே வேறு வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டோம். இந்தமுறை வீடு உள்ள இடமும் நல்ல இருக்கணும் பக்கத்துக்கு வீட்டுக்காரரும் தொந்தரவு தராதவராக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்.

அப்போது கடைதெரு அருகில் உள்ள டைப் - 3 காலியாவது தெரிந்து வந்து பார்த்தோம். பக்கத்துக்கு வீட்டுக்காரர்களும் முன்பே தெரிந்தவர்கள் தான். எனவே உடனே அந்தவீட்டுக்கு குடி வந்தோம். 

தமிழ் நடையில் தடம் பதித்தவர்

எழுத்தாளர் சுஜாதா அவரது எழுத்தைப் போலவே இளமைத் துடிப்புடன் வாழ்ந்து மறைந் திருக்கிறார். 70 வயதை கடந்த நிலையிலும் தனது உடலை வாட்டிய நோய்களை பொருட்படுத்தாமல், அவர் துடிப்புடனே எழுதியும் செயல்பட்டும் வந்தார்.

பெயரும் புகழும் சம்பாதித்துவிட்ட நிலையிலும் தளராத உற்சாகத்துடன், தமிழ் வாசகர்களுக்கு தான் அறிந்தவற்றை சொல்ல வேண்டும் என்ற உணர்வோடு எழுதி வந்திருக்கிறார்.
.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வந்த சுஜாதாவை எந்த அடைமொழிக்குள்ளும் அடக்கி விட முடியாது.

ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட அவர், தனது மனைவி "சுஜாதா' பெயரை புனைப்பெயராக எழுதத் தொடங்கிய காலத்தில் ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளராகவே அறியப்பட்டார். தனக்கென தனித்துவமிக்க ஜனரஞ்சக எழுத்தாளர்.

குமுதத்தில் தொடராக வெளி வந்த முதல் நாவலான "நைலான் கயிறு' மூலம் வாசகர்கள் மத்தியில் பிரபலமான "சுஜாதா', பெல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய படியே பத்திரிகைகளில் எழுதி குவித்த வேகம் அசாத்தியமானது.

சுஜாதா எழுதாத தமிழ் பத்திரிகைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ் எழுத்துலகில் அவரது கொடி பறந்தது.

"கணேஷ்வசந்த்' பாத்திரங்களை பிரபலமாக்கிய சுஜாதா, இன்னொரு பக்கம் ஸ்ரீரங்கம்
எஸ்.ஆர். என்னும் பெயரில் "கணையாழி' இலக்கிய பத்திரிகையில் கனமான விஷயங் களை தனக்கே உரிய இலகுவான நடையில் எழுதி வந்தார்.

அவரது இலக்கிய முகம் வெகுஜன வாசகர்களுக்கு தாமதமாகவே அறிமுகமானது. அதற்கு முன்பாகவே அறிவியல் சார்ந்த விஷயங்களை எளிமையாகவும் சுவையாகவும் சொல்லக் கூடியவராக அவர் அறியப்பட்டார்.

அவருடைய நவீன தமிழ் நடை இதற்கு உதவியாக இருந்தது. "கம்ப்யூட்டர்' என்பது ஒரு சொல்லாக கூட அறிமுகமாகாத காலத்திலேயே அவர் சிலிக்கான் பற்றியும், கம்ப்யூட்டர் பற்றியும் எழுதியது வியப்புரிக்குரியது.

அற்புதமான அறிவியல் புனை கதைகளையும் எழுதியதோடு, விஞ்ஞானத்தின் சமகால போக்கை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருந்தார்.
நாவல்கள் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விட்ட சுஜாதா, பின்னர் புதிய வேகத்தோடு
எழுதத் தொடங்கினார்.

இடையே மெக்சிகோ சலவைக்காரி ஜோக் தனக்கு தெரியும் என்று சொல்லி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவும் அவரால் முடிந்தது. கனவு தொழிற்சாலை, ஸ்ரீரங்கத்து தேவதைகள், பதவிக்காக, மோதிரக் கதைகள், கொலையுதிர் காலம், வசந்தகால குற்றங்கள் என்றும் எழுத முடிந்தது.

விஞ்ஞானம் பற்றி எழுதி வந்த சுஜாதா, தனது சாதாரண நாவல்களில் கூட போகிற போக்கில் உலக விஷயங்களையும், பிரபலமான ஆளுமைகளையும் குறிப்பிட்டபடி இருப்பார்.

இப்படி வைரக் கடத்தல் பற்றிய கதையில் ஒற்றை வரியில் "டி பியர்ஸ்' நிறுவனம் பற்றி எழுதி வருவார். கணேஷ் விடுமுறைக்காக படிக்க டால்ஸ் டாயின், வார் அண்டு பீஸ் நாவலை எடுத்து வைத்துக் கொண்டான் என்று எழுதுவார்.

இப்படி நல்ல வாசகர்களுக்கு தனது நாவலில் அவர் ஆங்காங்கே பொறி வைத்திருப்பார். அதை பிடித்துக் கொண்டால் வாசகர்கள் தீவிரமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் பயணத்தை மேற்கொள்ள தொடங்கலாம்.

பின்னர் கணையாழியில் எழுதியது போலவே, பிரபலமான பத்திரிகை களிலும், இலக்கிய விஷயங்களை எழுதத் தொடங்கினார். ஞானக் கூத்தனின் கவிதைகளையும், சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையையும், நகுலனின் நினைவுப் பாதையையும், தி.ஜானகிராமனின் கட்டிப்போடும் தமிழ் நடை பற்றியும் அவர் சராசரி வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

இசங்களின் பெயரில், தமிழில் இலக்கிய உலகில் பலர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, சுஜாதா ஆரவாரமே இல்லாமல் உலக இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்.
அவர் சுட்டிக்காட்டி பிரபலமான இளம் கவிஞர்களும் உண்டு. மனுஷ்ய புத்ரன், மகுடேஸ்வரன் போன்றோர் இதற்கு உதாரணம். அவர் கை காட்டிய புத்தகங்களின் பின்னே ஆயிரக்கணக்கான வாசகர்கள் படையெடுக்க தயாராக இருந்த நிலையிலும் சுஜாதா "விமர்சனம்' என்ற மகுடம் தரித்துக் கொள்ள விரும்பியதில்லை.

நல்ல விஷயங்களுடனான எனது பரிச்சயத்தை பகிர்ந்து கொள்வதே எனது பணி என அவர் செயல்பட்டு வந்தார். ஜனரஞ்சகமான எழுத்தாளர் என்ற நிலையில் இருந்து இலக்கிய உலகிற்கும், வெகுஜன வாசகனுக்கு மான பாலமாக அவர் உருவாகி நின்றார்.

கேள்விபதில் பகுதி மூலம் அவர் வாசகர்களுக்கு தெரியப்படுத்திய விஷயங்களும் அநேகம்.
எழுதாத விஷயமே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பல துறைகள் பற்றி எழுதிய சுஜாதா, திருக் குறளுக்கும் உரை எழுதினார். புறநானூற்றை எளிமைப்படுத்தி தருவதாக கூறினார். திரைக்கதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக் கொடுத்தார்.

பிரபலமாக இருந்த காலத்தில், "காயத்ரி' உள்ளிட்ட நாவல்களை படமாக்க கொடுத்து இயக்குனர்கள் அவற்றை சிதைத்து விட்டார்கள் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா, பிற்காலத்தில் தமிழ் திரை உலகில் ஐக்கியமான விதமும் வியப்பிற்குரியது தான். மணிரத்னம், ஷங்கர், நடிகர் கமல் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படைப்பு குழுவில் அவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.

சுயசரிதையை கூட வழக்கம் போல் எழுதாமல், அவை கட்டுரைகள் போலவே அவர் "கற்றதும் பெற்றதும்' என எழுதினார்.

தனது காலத்தில் பெரும் புகழை சம்பாதித்த சுஜாதா, சர்ச்சைகளுக்கோ, விமர்சனங்களுக்கோ அப்பாற்பட்டவர் அல்ல தான்! அதையும் வெகு ஜனமாக்க முடிந்தது அவரது பலம் என்றால் அதுவே அவரது பலவீன மாகவும் இருந்தது.

கனமான விஷயங்களை ரொம்பவும்எளிமை படுத்தி விடுவார் என்பதும், இலக்கியத்தரமாக அதிகம் எழுதியது இல்லை என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

குறிப்பாக, நழுவிச் செல்லும் அவரது பண்பு, கடுமையாக விமர்சிக்கப் பட்டதுண்டு. புறநானூறு உரையில், தமிழ் இலக்கியத்தை தன் மேதாவித்தனத்தால் தப்பும் தவறுமாக எழுதி இருக்கிறார் என்றும் கூறப் பட்டது. விமர்சனங்களை கேட்டு அவர் அதிகம் கோபப்பட்டதில்லை. பெரும்பாலும் புன்னகையுடனேயே எதிர் கொண்டார்.

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி. இலக்கிய ஆசான் என்று அவரை பலர் ஏற்க மறுக்கலாம், ஆனால் நவீன தமிழ் உரையில் புதிய வேகத்தை கொண்டு வந்ததற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர்.

சங்கத் தமிழில் துவங்கி தமிழுக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. தமிழ் உரைநடையை பொறுத்தவரை அதற்கு நவீனத்துவத்தை ஏற்படுத்தி புதிய பரிமாணத்தை தந்ததற்காக தமிழ் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
இரா. நரசிம்மன்

காசி யாத்திரை


நாங்கள் சென்ற மாதம் காசி யாத்திரை சென்று வந்தோம்.அப்போது கயா ,அலஹபத் மற்றும் காசி சென்று வந்தோம்.முன்னதாகவே ரயில் டிக்கெட்டும் தங்க இட வசதிக்கும் ஏற்பாடு செய்துக்கொண்டு பயணம் புறப்பட்டோம்.

காசியில் 2 நாட்கள் தங்கி கங்கையில் புனித் நீராடி விஸ்வநாததர்,விசாலக்ஷி, அன்னாபூரணி,அனுமன் முதலிய சாமி வணங்கி வந்தோம.கயாவிலும அலஹபாதிலும் நாட்டுக்கோட்டை சத்திரத்தில் தங்கினோம்.காசியில் குமரகுருபரர் மடத்தில் தங்கினோம்.கயாவிலும அலஹபாதிலும நாட்டுக்கோட்டை சத்திரத்தில் நல்ல தமிழ் நாட்டு சாப்பாடு கிடைத்தது . கோவிலுக்கும் சங்கமத்திற்கு செல்வதற்கும தம்பதி பூஜை செய்வதகும் வண்டி வசதியும் போட் வசதியும் செய்து கொடுத்தார்கள்.

காசியில் குமரகுருபரர் மடம கேதார்நாத் படித்துரைக்கு அருகில் உள்ளது. படித்துரைக்கு போகும் பாதையில் கேதாரீஸ்வர கோவில் உள்ளது்.
மடத்துக்கு எதிரில் உள்ள உணவகத்தில் நமது உணவு கிடைக்கிறது. பக்கத்தில் உள்ள ஹனுமான் கட்டிற்கு சென்று ரிகஷா பிடித்து விஸ்வநாததர், விசாலக்ஷி, அன்னாபூரணி கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி வணங்கி வந்தோம் . விசவநாதர் கோவிலில் போலீஸ் கெடுபிடி அதிகம் உள்ளது.மற்றபடி கோவில் செல்ல எந்த சிரமமும் இல்லை.

படகில் கங்கையில் சென்று அனைத்து படிதுறைகளை யும் ஆற்றின் கரைகளில உள்ள கோவில்களையும் பார்த்து வந்தோம்.   படகுகாரர்களும் பயமில்லாமல் நம்மை எல்லா இடங்களையும் காண்பிக்கிறார்கள். கடைசி நாள் கால பயிரவர் கோவிலுக்கு சென்ற காசி கயிறு வாங்கி வந்தோம்.ஒரு நாள் புது விஸ்வநாதர்
( பிர்லா மந்திர்) கோவிலுக்கு வந்தோம்.துர்கா கோவில, மனாஸ் கோவில, ஹனுமான் கோயில, பிந்து மாதவர் கோயில் சென்று கடவுளை வணங்கி வணங்கி வந்தோம் .

எல்லா ஊரிலும் அனைத்து வயதினரும் தமிழ் நாட்டு மக்களை பார்த்தோம். எல்லா ஊரிலும் கடைக்காரர்கள் தமிழ் பேசுகிறார்கள் . தமிழ் நாட்டு உணவும் கிடைக்கிறது. எனவே எந்த சிரமமும் இல்லாமல் சென்று வந்தோம.காசி பயணத்தின் பொழுது புத்த கயா மற்றும் சாரநாத் சென்று வரலாம்.

கார் வாங்கிய கதை( புத்தம் புதிய பதிப்பு )

நாங்கள் கார் வாங்க எண்ணியவுடன் எங்கள் முன் மூன்று கேள்விகள் தோன்றியது. பழைய டப்பா காரா , பழைய நல்ல காரா அல்லது புது காரா என்பதே அது. நன்கு யோசித்த போது புது கார் வாங்குவது என்று முடிவு செய்தோம் . புது கார் என்ன மாடல் என்று முடிவு செய்வதும் கடினமான காரியம். எனது நண்பர் ரங்கராஜனை மாருதி ஆல்டோ கார் கொண்டு வர சொல்லி அதில் குடும்பத்துடன் ஒரு ரவுண்ட் அடித்து பார்த்தபோது அந்த மாருதி ஆல்டோ கார் எங்களுக்கு பிடித்து விட்டது. மலிவான் விலையில் கிடைக்கும் மற்றும் அதிகம் பேர் வாங்குகிற மாருதி ஆல்டோ கார் வாங்க முடிவு செய்தோம்.

உடனே காருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பின் வரும் வேலைகளை தொடங்கினோம்
1.கார் கொட்டகை 
2 கார் லோன் 
3.கார் கொட்டகை கதவு 
4.மதகு 
5.கார் ஓட்ட கற்றுக்கொள்ள 
6.நல்ல கொத்தனார் 
7.இடம் முடிவு செய்தல்
ஆகியவை

கற்றுக்கொண்ட கதை

கார் வாங்கபோகிறேன் என்றவுடன, எல்லோரும் என்னிடம முதல கேள்வி உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா என்று கேட்டனர்.உடனே பயம் வந்துவிட்டத .கார் ஓட்டுவது மிகவும் கடினமான காரியம் என்று எண்ணிவிட்டேன்.உடனே ஓட்டுனர் பள்ளியில் சேர்த்துவிட்டேன். மலர் ஓட்டுனர் பள்ளியில் ஓட்டுனர் பொறுமையாக சொல்லித்தருகிறார் என்று சேர்த்தேன். பாடம் முடிந்துவிட்டது.இப்போது பயம் போயே போய்விட்டது.எல்லோரும் வீனாக பயமுறுத்தி விட்டார்கள் என்று இப்போது தெரிந்து விட்டது.கார் ஓட்ட இப்போது நன்றாக வந்துவிட்டது.நெய்வேலியில் நானே தனியாக ஒரு ரவுண்ட் சென்று வந்து விட்டேன்.
சென்ற வாரம் ஊருக்கு போய் உறவினர் அனைவரிடமும் கண்பித்து வந்துவிட்டேன்.
அனைவருக்கும் கார் பிடித்துவிட்டது.

கார் கொட்டகை கட்டும்போது கவனிக்கவேன்டியவை:

காரைவிட கார் கொட்டகை நன்கு பெரியதாக இருக்கவேன்டும்.

இரு பக்கமும் இரண்டு அடிக்கு குறையாத எடம் இருக்கவேன்டும் ( கர்ர் கதவை திறக்க முடியவேண்டும்). 

முன்னும் பின்னும் மூன்று அடி எடம் இருக்கவேண்டும்(முன்னால் இடிக்காமல் இருக்க வேண்டும்)

பக்கத்து வீட்டு நண்பரை ஐடியா கேட்டு அதற்கு எதிரிடையாக கட்டவேண்டும்.
( அவர் அவருக்கு சவுகர்யமாக இருக்கவே ஐடியா சொல்லுவார்).

ஏன் இவ்வளவு நீளம?்  
ஏன் இவ்வளவு அகலம?் 
என்றெல்லாம் சொல்லி நம்மை குழ்ப்பி விடுவார்.
அவருடைய கொட்டகைக்கு போகும் வழியில் சிமென்ட் போட ஐடியா கொடுப்பார். 
எல்லாவற்றையும் ஒரு காதில் கேட்டு மறு காதில் விட்டு விட வேண்டும்.