


* 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லாமல் தவிர்த்தல்?!
* குடையை பயன்படுத்துதல். இதில் கூச்சம் வேண்டாம். கருப்பு வண்ணத்தை தவிர்த்து மென்மையான வண்ணத்தை பயன்படுத்தலாம்.
* ஸ்டெயிலை தவிர்த்து சூரிய ஒளியை தடுக்கும் வகையிலான குளிர்ச்சி தரும் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணிதல்.
* காட்டன் ஆடைகள் நல்ல கைக்கொடுகும். வியர்வையை உறிஞ்சும்.
* காலையில் குளிர்ந்த உணவை உண்ணலாம். பழைய சாதம், கூழ் போன்றவை நாம் மறந்து போன உணவு வகைகள். சாப்பிட்டு பழகிப்பாருங்கள்.
* வீட்டில் மோர் எப்போதும் இருக்கட்டும். லஸ்சியாக , உப்பிட்ட மோராக திரவ உணவை அவ்வப்போது அருந்தலாம்.
கார உணவு இக்கோடைக் காலத்தில் எரிச்சலைத் தரும்.
* கீரை ஜூஸ் (ஒன்றுமில்லை வேகவைத்து சிறிது உப்புச் சேர்த்து வடிகட்டி நீர்தான்) இதில் உப்புசத்து மற்றும் உயிர்ச்சத்துகள் அதிக அளவில் உங்களுக்கு கிடைக்கும்.
* இருசக்கர வாகனங்களை வெயிலின் தாகம் குறையும் வரையில் தவிர்த்தல் நலம்.
* பேருந்தில் சன்னல் ஓரம் உட்கார்ந்தால் நெருப்பாற்றில் நீந்துவது போல. சென்னைவாசிகளை இதை தவிர்கிறார்கள் அனுபவசாலிகள்.
* வீடுகளில் உங்கள் சன்னல் மற்றும் கதவுகளில் ஈரத்துணியை நனைத்து அதிகம் தண்ணீர் இல்லாமல் போர்த்திவிடுங்கள். வெப்பத்தை சற்றுத் தணிக்கும்.
* வேர்க்குரு வந்து விட்டவர்கள் சந்தனத்தை குழைத்து ஆன்மீகவாதிப் போல் பூசிக் கொள்ளுங்கள். சில நாட்களில் பலன் கிடைக்கும்.
* தினமும் குறைந்த பட்சம் இரண்டு முறை குளியல் போடுங்கள். சென்னையில் இருக்கிறீர்களா கவலை வேண்டாம், டவளை எடுத்து நனைத்து பிழிந்து உடம்பை துடைத்துக் கொள்ளுங்கள்.
* வெளியேச் செல்லும் போது குடிநீர் சிறிய பாட்டில்களிலாவது கொண்டு செல்லுங்கள். வறட்சியின் போது நாக்கை நனைத்துக் கொள்ளுங்கள்.
* கர்சீப்பை நனைத்து ஈரத்துடன் தலையில் போட்டு நடக்க ஆரம்பியுங்கள்.
நான் பள்ளியில் படித்த காலத்தை நினைத்தால் இப்போது இனிமையாக இருக்கிறது. அப்போது எங்கள் ஊருக்கு மின்சாரம் வராத நாட்கள். பகலில் மரத்தடியில் அமர்ந்து படிப்போம். இரவில் வீட்டில் திண்ணையில் அமர்ந்து மண்ணெண்ணெய் விளக்கில் படிப்போம்.
கோடை காலங்களில் வயலில் மாடு கட்டி உழுவார்கள்.முன் காலங்களில் கிணறு ஊற் று தோண்டி ஏற்றம் போட்டு தண்ணீர் இரைப்போம். கிணற்றில் முங்கிலால ரவுண்டாக வலயம் போல் செய்து கிணற்றுக்குள் வைத்து சுற்றிலும் மண் மூடி இருக்கும் அது தான் ஊற் று எனப்படும். அதன் ஒரு புறத்தில் தென்னை மரத்தை நடுவில் தோண்டி எடுத்து வாய்க்கால் போல் செய்து அதில் தண்ணீர் இறைத்து வயலுக்கு பாச்சுவார்கள்.வயலில் மடை திறந்து அனைத்து பத்திகளுக்கும் தண்ணீர் விடுவது தான் எனது வேலை.
பிற்காலத்தில் டீசல் எஞ்சின் அதன் பின் மோட்டார் பம்பு வந்தது. டீசல் எஞ்சின் ஓடும்போது கேட்கும் அதிக சப்தம் நன்கு ஞாபகம் உள்ளது. மணிகொரு முறை டீசல் போட வேண்டும் . மோட்டார் ஓடும் போது அந்த வேலை இல்லை. கரண்ட் நின்று வயலுக்கு போய் வரும் போது மோட்டார் ஸ்டார்ட் பண்ண வேண்டும்.
வானத்தில் மேகங்கள் கோலம் போட்டது போல் இருக்கும் . அவை வேகமாக நகருவதையும் , பறவைகள் கூட்டமாய் பறப்பதை பார்ப்பது கண் கொல்லா காட்சியாகும்.
மாதா மாதம் தேங்காய் வெட்டி வருவதும் இனிமையான வேலை. ஒரு பத்து தென்னை தோப்புகளுக்கு போய் வெட்டி வருவோம். வெட்டிய தேங்காய மாட்டு வண்டியில் எடுத்து வருவோம். அப்போது இளநீர் வெட்டுவோம். சித்திரையில் பன நுங்கு நன்றாக இருக்கும் . எங்களுடைய பனை மரத்தில் பனங் குலை வெட்டி வந்து தேவைப்படும்போது வெட்டி சாப்பிடுவோம்.
காலையில் பேப்பர் , தபால் வராது மதியம் ஒரு மணிக்கு மேல்தான் வரும். எனவே காலையில் பட்டணம் போய் வங்கி வருவோம். பேப்பர்காரரும் எங்கள் தெருவில் வாங்கும் அத்தனை பேப்பரும் எங்களிடம் தந்து விடுவார். எனவே தின தந்தியுடன், தினமணி யும் படிப்போம்.