Friday, April 10, 2009

காலேஜ் நாட்கள்

அழகப்பா இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்த முதல் நாள் இன்னமும் நினைவில் உள்ளது.

மிகுந்த மகிழ்ச்சியோடு புது நண்பர்களோடு காலேஜ் மற்றும் விடுதி வாழ்கையை தொடங்கினோம்.காரைக்குடி டவுனுக்கு சென்று புது டிரஸ் , புது ஷூ வாங்கிவந்தோம்.காலேஜ் கடையில் புத்தகம்,நோட் புத்தகம் வாங்கி படிக்க தொடங்கினோம் .முதல் வருடம் SCH என்னும் ஹாஸ்டலில் ரூம் எண் 39 என்னுடைய ரூம்.இது முதல் மாடியில் இரண்டாவது ரூம் ஆகும்.

விஜிடரியன் உணவு விடுதி சாப்பாடு நன்றாக இருக்கும்.என்னுடன் நாலைந்து நண்பர்கள் எப்போதும் படிக்க செல்லும்போதும், சாப்பிட போகும்போதும் உடன் வருவார்கள். அவர்களில் சிவநேசன் , சிவசுப்ரமணியம், அசோகன் பெயர் நினைவுக்கு வருகிறது. தினமும் மாலை , மற்றும் இரவு சாப்பிட்ட பின்னரும் படிக்க முருகப்பா ஹால் அல்லது மெயின் பில்டிங் ஹால் செல்லுவோம் . தினமும் இரவு 9 மணிவரை படித்துவிட்டு வருவோம். விடுமுறை நாட்களில் ஆலமரம் செல்லுவோம். என்னுடைய எல்லா நண்பர்களும் எல்லா பரீட்சைகளிலும் நல்ல மார்க் வாங்குவோம். 

மெஸ்ஸில் சாப்பாடு தயாராகும் வரை , மாடியில் புத்தகம் மற்றும் பேப்பர் இருக்கும் .டேப் ரிகார்டரில் பாட்டு கேட்டுகொண்டே படித்துவிட்டு பொழுது போக்குவோம். மெஸ்ஸில் ஞாயிறு காலை மசால் தோசை நன்றாக இருக்கும் .தினமும் மாலையில் காப்பி,டீ மற்றும் பப்ஸ், கேக்,ஸ்வீட் காரம் ஏதேனும் ஒன்று இருக்கும்.

இரண்டாவது வருடம் ENH என்னும் விடுதியிலும் மூன்றாம் வருடம் ETH என்னும் விடுதியிலும் நான்காவது வருடம் TNH என்னும் விடுதியிலும் கடைசி வருடம் KNH என்னும் விடுதியிலும் தங்கினோம். இரண்டாவது வருடம் ENH என்னும் விடுதியிலும் மூன்றாம் வருடம் ETH என்னும் விடுதியிலும் நான்காவது வருடம் TNH என்னும் விடுதியிலும் கடைசி வருடம் KNH என்னும் விடுதியிலும் தங்கினோம்.

எல்லா விடுதியிலும் முன்புறம் விளையாடும் இடம் இருக்கும்.மாலை நேரங்களில் யாராவது விளையாடிகொண்டே இருப்பார்கள். ஹாஸ்டல் அருகில் டீ கடையும் சைக்கிள் வாடகை கடையும் இருக்கும். காரைக்குடி டவுனுக்கு போகவேண்டுமானால் சைக்கிள் எடுத்துக்கொண்டு போவோம். கேரியர் இருக்காது.இரவு செகண்ட் ஷோ சினிமா போவோம்.காரைக்குடி டவுன் அல்லது கோட்டையூர் போவோம்.

No comments: