Friday, April 10, 2009

அந்த நாட்கள் மிக ரம்மியமான நாட்கள

 
எனது விடுமுறை நாட்களில் எனக்கு பிடித்தமான செயல, எனது சிறு வயது நாட்களை நினைத்து பார்த்தல் ஆகும். ஒரு சிறிய கிராமத்தில் பணவசதி , மின் வசதி , பேருந்து வசதி இல்லாத நிலையில் , வங்கியில் படிப்புக்கு கடன் வாங்கி என்னை இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்க வைத்து தமிழ் நாட்டிலேயே வேலை பார்க்க வைத்து என்னை இந்த நிலைக்கு (முதன்மை அதிகாரி) கொண்டு வந்த என் அப்பாவின் நினைவுதான் அதில் முதலில் வருவது . 

எங்கள் கிராமம் ஒரு ஆற்று பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.ஆற்றில் தண்ணீர் வரும் பொது ஆற்றின் குறுக்கே உள்ள குறுகிய மூங்கில் பாலத்தில் நடந்து வர தைரியம் வேண்டும்.பாலத்தில் உள்ள பலகைகள் ஆணி இல்லாமல் ஆடிக்கொண்டு பயத்தை உண்டுபண்ணும்.இரவு நேரத்தில் கேட்க வேண்டாம்.ஆற்றில் தண்ணீர் வரும்போது மாட்டு வண்டியில் ஆற்றை கடந்து வர மிகவும் பயமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நான் கல்லூரியிலுருந்து வரும்போது ஆற்றங்கரையில் பஸ் வரும்வரை காத்திருந்து என்னை வீட்டுக்கு அழைத்து செல்வார்கள். அவர்கள் இப்போது இல்லை.அவர்கள் மறைந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன.

எனது அம்மா இப்போது எனது தம்பியுடன் அதே கிராமத்தில் இருக்கிறார்கள். கிராமம் இப்போது மிகவும் முன்னேறிவிட்டது. ஆற்றுக்கு பாலம் கட்டிவிட்டார்கள். மின்சாரம்,கேபிள் டிவி , பஸ் வீட்டுக்குவீடு பைக் ஸ்கூட்டர் வந்துவிட்டது. முன்பு போல் யாரும் மாட்டுவண்டி எங்கும் உபயோகிப்பது இல்லை.குடவாசலிலுருந்து வரவேண்டுமென்றால் ஆட்டோ பிடித்து வரலாம்.

எட்டாவதுவரை உள்ள எங்கள் ஊர் பள்ளிகூடத்தில படித்துவிட்டு பின்னர் SSLC வரை குடவாசல் பள்ளியில் படித்த நினைவுகள் என்றும் பசுமையாக நினைவில் உள்ளது.ஆரம்பத்தில் தினமும் 2 மைல் நடந்து பள்ளிக்கூடம் சென்றுவந்தேன் பின்னர் சைக்கிளில் சென்றுவந்தேன் .நடந்து போகும்போது ஏற்பட்ட சந்தோசம் சைக்கிளில் போகும்போது ஏற்படவில்லை. தினமும் திரும்பிவரும்போது மளிகை சாமான்கள் வாங்கிவருவேன். வரும்போது ஆற்றில் இறங்கி சைக்கிள் மணலில் தள்ளிக்கொண்டு வருவேன். கோடை காலங்களில் காய்ந்த வயல்களில் இறங்கி நடந்து செல்வேன்.

வாரவாரம் ஞாயிறு அன்று ஆற்றங்கரைக்கு சென்று அந்த பாதையில் போகும் பேப்பர்காரரிடம் குமுதம் புத்தகம் வாங்கிவருவேன். அப்போது முதல் படிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. குமுதத்தில் வரும் தொடர்கதைகளை பயிண்டு செய்து வைப்போம்.

எங்கள் தெரு முதல் வீட்டில் ஆனந்த விகடன் வாங்குவார்கள். எனவே அவர்கள் வீட்டில் விகடன் படித்த நினைவு இருக்கிறது.அதில் அட்டை படம் ஜோக் இருக்கும்.பக்கத்துக்கு வீட்டில் ராணி புத்தகம் வாங்குவார்கள்.அதையும் அங்கு சென்று படிப்பேன்.தினமும் வயலுக்கு சென்று வயல் வேலை செய்வதை பார்ப்பதும் , மாதாமாதம் தேங்காய் வெட்டுவதும் , மனதில் மறக்காத நினைவாக இன்னமும் இருக்கிறது.

பண்டிகைகள் மிக நன்றாக கொண்டாடுவோம். தீபாவளிக்கு பல நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் செய்ய மாவு அறைத்து வருவோம். சாதா முறுக்கு, முள்ளு முறுக்கு, ரவா உருண்டை ,மைசூர் பாக்கு, தேங்காய் பாறை முதலிய பலகாரங்கள் வீட்டில் செய்வார்கள்.

பொங்கலுக்கு கரும்பு ,வாழைபழம் , மஞ்சள், இஞ்சி , பாட்டாசு முதலியவை குடவாசல் மாட்டுவண்டியில் சென்று வாங்கிவருவதும் நினைவு உள்ளது. பொங்கல் மற்றும் தீபாவளிக்கு வரிசை பொருட்கள் என்கண் மற்றும் ஆரியச்சேரி சென்று அக்காக்களுக்கு கொடுத்து வருவோம். தீபாவளிக்கு புது டிரஸ் வாங்குவது சந்தோஷமாக இருக்கும் . கும்பகோணம் சென்று டிரஸ் வாங்கிவருவோம். அக்கா யாராவது அங்கு கடைக்கு நீராக வருவார்கள் அவர்கள் வரிசை புடவை தேர்ந்தெடுப்பார்கள்.
பிள்ளையார் சதுர்த்திக்கும் மாட்டு பொங்கலுக்கும் பிள்ளையார் கோவிலுக்கு செல்வோம்.மாடுகளுக்கு மாலை போடுவோம்.

PUC படிக்க பூண்டி கல்லூரியில் சேர்த்தேன் .முதல் முதலாத வீட்டைவிட்டு வெளியே விடுதியில் தங்கி படித்தேன். என் வாழ்வில் மிகவும் சந்தோஷமான நாட்களில் அந்த நாட்களும் ஒன்று.
நன்கு படித்து நல்ல மார்க் வாங்கி இன்ஜினியரிங் காலேஜில் சேரவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருந்தகாலம் அது.
சேர்த்த முதல் நாள் அங்கு வந்த மாணவர்களின் அப்பாக்கள் ஒன்று சேர்ந்து விடுதி அறை நண்பர்களை சேர்த்துவிட்டார்கள்.
செழும்பரிதி,சுந்தர் , குமரகுருபரன் ,முருகானந்தம் ஆகியோர் பெயர் நினைவுக்கு வருகிறது.அவர்கள் திருத்துறைபூண்டி,மன்னார்குடி மாணவர்கள். வாரவாரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். அழுக்கு துணிகளை துவைத்து எடுத்து செல்வேன்.

இன்ஜினியரிங் படிப்பு காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் படித்தேன்.மிகவும் இனிமையான நாட்கள் அவை .தினமும் மாலையில் கல்லூரிக்கு சென்று போட்டி போட்டுகொண்டு படிப்போம்.

கணக்கில் எல்லா செமஸ்டர்களிலும் 100 % மார்க் வாங்கினேன். மூன்றாம் வருடத்தில் ECE பிரான்ச் செலக்ட் செய்தேன்.அந்த பிரிவில் நன்றாக படித்து எல்லா வருடங்களிலும் முதல் ரேங்க் வாங்கினேன்.

காலேஜ் டூர் மூன்று முறை சென்று வந்தோம். மூன்றாம் வருடத்தில் திருச்சி,ஊட்டி, மெட்ராஸ் சென்றுவந்தோம். நான்காம் வருடத்தில் திருவனத்தபுரம்,பெங்களூர்,மைசூர், ஹைதராபாத் சென்றுவந்தோம். கடைசி வருடத்தில் கோவா , பாம்பே , டெல்லி , ஆக்ரா , ஸ்ரீநகர் சென்று வந்தோம்.
ஸ்ரீநகர் முதல் ஜம்முதாவி வரை விமானத்தில் வந்தோம்.
முதல் விமானப்பயணம் நன்றாக இருந்தது.

காரைக்குடி காலேஜ் டவுனிலிருந்து தனியாக உள்ளது.எனவே தினமும் எப்போதும் படிப்பதுதான் வேலை. வாரம் ஒருமுறை டவுன் போய்வருவோம்.டவுன் பஸ் அல்லது வாடகை சைக்கிள் எடுத்து போய்வருவோம். மாதமொருமுறை நானும் நாலைந்து நண்பர்களும் குன்றக்குடி கோயில் போய்வருவோம்.
ஆண்டு விடுமுறையில ஊருக்கு வருவோம்.ஆனால் study லீவ் நாட்களில் அங்கேயே தங்கி படிப்போம்.

No comments: