Friday, April 10, 2009

நான் சந்தித்த சில நட்சந்திரங்கள்.


எனக்கு ஊர் சுற்றுவது மிகவும் பிடிக்கும். அப்படி செல்லும் பொது சில திரை நட்சத்திரங்களை சந்தித்து இருக்கிறேன். அப்படி சந்தித்தவர்களில் நன்கு நினைவு வருவது விஜயகாந்தும் ஒருவர். 1989 இல் என்று நினைக்கிறன் . சென்னையிலிருந்து டெல்லி விமானத்தில் போகும்போது எனக்கு பக்கத்துக்கு சீட்டில் பார்த்தால் விஜயகாந்த். ஒரே அதிர்ச்சி பேசலாமா என்று ஆர்வம். யாரும் அவரை கவனித்ததாக தெரியவில்லை. எனது நண்பர் என்னை அவரிடம் பேச தூண்டினர்.

ரொம்ப நேரம் பேசிக்கொண்டே சென்றோம். அப்போது அவர் அவ்வளவு பிரபலம் ஆகாத நேரம்.காஷ்மீரில் ஒரு படத்திற்காக செல்லுவதாக சொன்னார். நெய்வேலியை பற்றியும் எங்கு வரும்போது சுற்றிபார்க்க அவரை அழைத்த நினவு வருகிறது.நான் எதோ பொய் சொல்லுகிறேன் என என்ன வேண்டாம். என்னுடம் பயணம் செய்த என்னுடைய நண்பர் நெய்வேலியில் தான் இருக்கிறார்.அப்போது நான் நாங்கள் அனைவரும் அவரது விசிறிகள்தான் என்று சொன்னதால் தான் பின்னர் தேர்தலில் விருதாச்சலத்தில் நிற்கபோகிறேன் என்று தேர்தலின் போது என்னிடம் சொன்னார். ( இது மட்டும் ஒரு சின்ன பொய் ). 

ஒருமுறை ஊட்டி ரோஸ் தோட்டத்தில் விவேக்கை பார்த்தோம் பேசினோம்.அவர் மனைவியுடன் வந்திருந்தார். அவருக்காக வாட்டர் பால்ல்ஸ் ஆன் செய்தார்கள். நன்றாக இருந்தது. காமெராவை மறந்து லொட்ஜ் ரூமிலேயே விட்டுவிட்டு வந்ததை நினைத்து பல நாட்கள் வருந்தினேன்.

காலேஜில் படித்தபோது வருடாவருடம் ஏதாவது விழாவிற்கு நட்சந்திரங்கள். யாரையாவது கூப்பிடுவார்கள். அப்படி பாரதிராஜா, பாக்யராஜ், மனோரமா வந்திருக்கிறார்கள்

1 comment:

R.Gopi said...

//அப்போது நான் நாங்கள் அனைவரும் அவரது விசிறிகள்தான் என்று சொன்னதால் தான் பின்னர் தேர்தலில் விருதாச்சலத்தில் நிற்கபோகிறேன் என்று தேர்தலின் போது என்னிடம் சொன்னார். ( இது மட்டும் ஒரு சின்ன பொய் ). //

சின்னதா இருந்தாலும் சூப்பர் பொய்ங்க.

//அப்படி பாரதிராஜா, பாக்யராஜ், மனோரமா வந்திருக்கிறார்கள்//

இவங்க கிட்ட பேசினது ஏதாவது ஞாபகம் இருக்கா??